
தூத்துக்குடியில் கலைஞாின் குறளோவியம் ஆய்வுரையின் முப்பெரும் விழா
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞரின் குறளோவியம் ஆய்வுரையின் முப்பெரும் விழா 12.02.2024 திங்கள்கிழமை மாலை சி.எம். மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அறிவுச்செல்வம் தலைமையில், தெய்வநாயகம், லெட்சுமணன் ஸ்ரீதரகணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனர், உலகத் திருக்குறள் பேரவை தலைவா் தூத்துக்குடி தனராசு வரவேற்புரையாற்றினார். உலக அமைப்பாளா் பன்னாட்டுத்தமிழுறவு மன்றம் பெருங்கவிக்கோ சேதுராமன் சிறப்புரையாற்றினாா். பன்னாட்டுத்தமிழுறவு மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளா் மோ.அன்பழகன் குறளோவியம் உரையாற்றினார். இந்நிகழ்வில் சங்கரேஸ்வாய் உட்பட பலா் கலந்துகொண்டான். பன்னாட்டுத்தமிழுறவு மன்ற தூத்துக்குடி இளமுருகு நன்றியுரையாற்றினாா்.
செய்தி & புகைப்படம்- செய்தியாளர்: ரவி
CATEGORIES மாவட்டம்