
திருச்செந்தூர் அருள்மிகு ஶ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நாளை (பிப்:14) மாசித்திருவிழா கொடியேற்றம்- இன்று கொடிப்பட்ட வீதி உலா
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் புகழ்மிக்க. மாசித் திருவிழா
நாளை புதன்கிழமை (பிப் 14)
கொடியேற்றத்துடன் தொடங்குகிறது, முன்னதாக இன்று செவ்வாய்கிழமை (பிப்13 ) மாலை கொடிப்பட்டவீதி உலா நடைபெறுகிறது.
இதையொட்டி புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோயில்
நடைதிறக்கப்படடு.
1:30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்தாண்ட அபிஷேகம் நடைபெரும். 4:30 மணிக்கு திருக்கோயில் செப்பு
கொடிமரத்தி திருவிழா கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெரும்.
இதன் முக்கிய நிகழ்ச்சியாக
5-ம் திருநாளான பிப்
18ந்தேதி மேலக்கோயிலில் (சிவன் கோயில்) இரவு 7:30 மணிக்கு குட வருவாயில் தீபாராதனையும், பிப்:20-ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு அருள்மிகு சண்முகபெருமானின்
உருகு சட்ட சேவை நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து 8:45 மணிக்கு ஆறுமுகப்பெருமான்
வெட்டி வேர் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன் கட்டளை பண்டபத்தை வந்து சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மாலை 4:30 மணிக்கு சுவாமி
சிவன் அம்சத்தில் தங்க சப்பரத்தின் மீது சிவப்பு சாத்திக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா
வந்து பக்தர்களுக்கு
காட்சியளிக்கிறது.
பிப் 21ம் தேதி காலை சுவாமி பிரம்மா அம்சத்தில் பெரிய வெள்ளிச்சப்பரத்தில்
வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி திருவீதிவலம் வந்து மேலக்கோயிலில்
சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், சிறப்பு திபாராதனையும் நடைபெரும்.. முற்பகல் 11 மணிக்கு சுவாமி
விஷ்ணு அம்சத்தில்
பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து சேர்ந்தது
பிப்.21ம் தேதி சுவாமி தங்க கயிலாய பர்வத
வாகனத்தாலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும்
எழுந்தருள்கின்றனர்.
ப்த்தாம் திருநாளான
பிப்:23-ம்தேதி சிகர நிகழச்சியான தேரோட்டம் நடக்கிறது,
காலை 6:30மணிக்கு
விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதியில் வலம் வந்து அருள் பாலிக்கின்றனர்.
பிப்:24-ம் தேதி இரவு
தெப்பத்திருவிழா நடைபெற்று,
மறு நாள்12ஆம் திருநாளுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர்
குழுத்தலைவர்
இரா. அருள் முருகன்,
இணை ஆணையர் கார்த்திக்,
அறங்காவலர்கள்
அனிதா குமரன், கனேசன், ராமதாஸ், செந்தில் முருகன்
மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
“நடைதிறப்பு
நேரம்; 1.7 ஆம் திருநாளில், (பிப்.14,20) திருக்கோயில்
அதிகாலை 1 மணிக்கு,2ஆம் திருநாளில்(பிப்.15)
3 மணிக்கு,மற்ற நாட்களில் வழக்கம் போல் 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு,
4:30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறும்.”
‘ செய்தி – திருச்செந்தூர் சதீஷ்