Breaking News
ஹெலிகாப்டரில் ஏறும்போது கீழே விழுந்தார் ஜெட்லி

மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, உத்தகரண்ட் மாநிலத்தில், ஹெலிகாப்டரில் ஏறும்போது, கால் இடறி, கீழே விழுந்தார்.

கீழே விழுந்தார்:

உத்தரகண்ட் மாநிலத்தில், யோகா குரு பாபா ராம்தேவ், மூலிகை செடிகளால் ஆன, பூங்காவை அமைத்துள்ளார். இதை பார்வையிடுவதற்காக, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று(மார்ச் 12), ஹரித்வார் சென்றிருந்தார். அது தொடர்பான நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இதன்பின், டில்லி திரும்புவதற்காக, ஹெலிகாப்டரில் ஏறினார்.

அப்போது, கால் இடறி, கீழே விழுந்தார். இதையடுத்து, அவரது பாதுகாப்பு அதிகாரிகள், அவரை துாக்கினர். சில நிமிடங்கள் ஓய்வுக்கு பின், மீண்டும், அதே ஹெலிகாப்டரில், அவர் டில்லி திரும்பினார்.

இதுகுறித்து, உத்தரகண்ட் போலீசார் கூறுகையில், ‘ஜெட்லி, நலமாக உள்ளார். பயப்படும்படியாக, அவருக்கு எந்த காயமும் இல்லை’ என்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.