Breaking News
கதியானை மணந்தார் சாக்ஷி மாலிக்

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற அரியாணாவைச் சேர்ந்த சாக்ஷி மாலிக், மல்யுத்த வீரரான சத்தி யவர்த் கதியானை மணந்தார்.

இவர்களது திருணம் நேற்று முன்தினம் மாலை சாக்ஷியின் சொந்த ஊரான ரோடக்கில் நடை பெற்றது. திருமண விழாவில் 2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுசில் குமார், அரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா, இந்திய தேசிய லோக் தல் தலைவர் அபேய் சிங் சவுதாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

24 வயதான சாக்ஷி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்திருந்தார். ஒலிம்பிக் போட்டி முடிவடைந்த அடுத்த இரு மாதத்தில் 23 வயதான கதியானுக்கும், சாக்ஷிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கதியானும் மல்யுத்த வீரர்தான். அவர் 2010-ம் ஆண்டு நடைபெற்ற இளைஞர்கள் ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கமும், 2014 காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.