Breaking News
3 மாதத்தில் சமந்தா திருமணம் : குடும்பத்தினர் அவசர ஏற்பாடு

காதல் ஜோடிகள் சமந்தா, நாக சைதன்யாவுக்கு சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டது. முன்னதாக நாக சைதன்யா தம்பியும் நடிகருமான அகில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அவரது காதலி ஸ்ரேயாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்த நிலையில் திடீரென்று அகில், ஸ்ரேயாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவீட்டாரும் திருமணத்தை ரத்து செய்தனர். ஸ்ரேயா குடும்பத்தினர் தனது மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடிவு செய்திருக்கின்றனர். அகில் திருமண எண்ணத்தை கைவிட்டு நடிப்பில் கவனத்தை முழுமையாக செலுத்தி வருகிறார்.

அகில் திருமணம் ரத்தானது குடும்பத்துக்கு ஏற்பட்ட சகுன தடையாக நாகார்ஜுனா, அமலா கருதுகின்றனர். இதனால் சமந்தா, நாக சைதன்யா திருமணத்தை தள்ளிப்போடாமல் விரைந்து நடத்த முடிவு செய்துள்ளனர். இன்னும் 3 மாதங்களுக்குள் அதாவது வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் இவர்கள் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது. நிச்சயதார்த்தத்துக்கு பிறகு சமந்தாவும், சைதன்யாவும் இணை பிரியாமல் லிவிங் டு கெதர் பாணியில் வாழத் தொடங்கி உள்ளனர்.

அவர்கள் இருவரையும் தற்போது படப் பிடிப்பு இருவேறு திசைகளுக்கு பிரித்திருக்கிறது. தெலங்கானாவில் நடக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சைதன்யா நடித்து வருகிறார். மறுமுனையில் ஆந்திர மாநிலம் பட்டிசீமா பகுதியில் நடக்கும் படப்பிடிப்பில் சமந்தா நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகும் நடிக்க முடிவு செய்திருக்கும் சமந்தா மேலும் 3 புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.