Breaking News
புயல் சின்னம் : துறைமுகங்களில் 2 ம் எண் எச்சரிக்கை கூண்டு

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மோரா பயல் சின்னமாக உருவாகி உள்ளது. இந்த புயல் சின்னம் நாளை கரையை கடக்க உள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர், நாகை, புதுச்சேரி, எண்ணூர், பாம்பன் ஆகிய துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் தட்பவெப்ப நிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் புயல் சின்னம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.