Breaking News
வால்பாறையில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை

கோவை வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவ மழை துவங்கி பெய்து வருகிறது. வால்பாறையில் கடந்த 2 நாட்கள் பெய்து வருகிறது. கன மழை காரணமாக இரண்டு வீடுகள் இடிந்தன.

அணை நீர் மட்டம் உயர்வு

சோலையார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடிஉயர்ந்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 24 மணி நேரத்தில் 14.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வால்பாறையை அடுத்த சின்னகல்லாரியில் கடந்த 24 மணி நேரத்தில் 14.2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 4வது நாளாக மழை தொடர்கிறது.

குமரி மாவட்டத்தில் லீவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களாக கன மழை பெய்து வருவதால் இன்று (27 ம்தேதி) மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சஜன் சிங் சவன் உத்தரவிட்டுள்ளார்.

குற்றாலத்தில் வெள்ளம்

: மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.