Breaking News
தபால் நிலையங்களில் இன்று முதல் ஆதார் திருத்தம்

சென்னையில் உள்ள, 10 தபால் நிலையங்களில், ஆதார் அட்டைகளில் உள்ள பிழைகளை, இன்று முதல் திருத்திக் கொள்ளலாம்’ என, இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

ஆதார் அட்டைகளின் விபரங்களை மேம்படுத்தும் வகையில், இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம், இந்திய அஞ்சல் துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, தபால் நிலையங்களில், ஆதார் அட்டையில் தேவையான திருத்தங்களை செய்து கொள்ளலாம்.

சென்னை, அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், தி.நகர், மயிலாப்பூர், பரங்கிமலை, பூங்கா நகர் போன்ற இடங்களில் உள்ள தலைமை தபால் அலுவலகங்கள்; அண்ணாநகர், அசோக் நகர், திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டையில் உள்ள துணை அஞ்சலகங்கள், என, 10 தபால் நிலையங்களில், இன்று முதல் திருத்தங்களை செய்து கொள்ளலாம்.

படிப்படியாக, தமிழகம் முழுவதும் உள்ள, 2,515 தபால் நிலையங்களுக்கும், இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.