Breaking News
திமுகவுக்கு அமித்ஷா ரிங் மாஸ்டராக உள்ளார்; தமிழக அமைச்சர்களை சிபிஐ மூலம் மத்திய அரசு மிரட்டுகின்றது – தம்பிதுரை எம்பி

கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஆட்சி கவிழாது, 5 ஆண்டு நீடிக்கும். தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது. இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என தேசிய கட்சிகள் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள், வட மாநிலத்தை சேர்ந்த 10 லட்சம் பேர் தமிழகத்தில் வேலை செய்கின்றனர்.
திமுகவுக்கு அமித்ஷா ரிங் மாஸ்டராக உள்ளார். திமுகவுக்கு அமித்ஷா ரிங் மாஸ்டர் என்பதை என்னால் நிருபிக்க முடியும். பாஜக மற்றும் திமுகவுக்கு ஆதரவாக சிபிஐ செயல்பட்டு வருகிறது. தமிழக அமைச்சர்களை சிபிஐ மூலம் மத்திய அரசு மிரட்டுகின்றது.

சிபிஐ மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதன் இயக்குநர்களே மாற்றப்பட்டு வருவதால், சிபிஐ அமைப்பை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.