திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகன் – வள்ளியம்மன் திருக்கல்யாணம் நாளை (24ம்தேதி) நடைபெறுகிறது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகன் – வள்ளியம்மன் திருக்கல்யாணம் நாளை (24ம்தேதி) நடைபெறுகிறது

அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை (24ம் தேதி) நடக்கிறது. இதனை முன்னிட்டு இக்கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 5:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாரதனை நடக்கிறது. அதிகாலை 5:00 மணிக்கு வள்ளியம்மன் சப்பரத்தில் எழுந்தருளி தபசு காட்சிககு முக்கிய வீதிகள் வழியாக சிவன் கோயில் சென்று சேருகிறார். அதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு சாயரட்சை தீபாராதனை ஆனதும் சுவாமி குமரவிடங்க பெருமான் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக சிவன் கோயில் வந்து வள்ளியம்மனுக்கு காட்சியளிக்கிறார். தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு கீழரதவீதி முகப்பில் சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளியம்மன் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

இரவு 9:00 மணிக்கு கோயில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமான் – வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. இதில் பக்தர்கள் மொய் எழுதி வழிப்படுகின்றனர். பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, விபூதி குங்குமம் அடங்கிய பிரசாதம் வழங்கப்படுகிறது.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் மற்றும் இணை ஆணையர் கார்த்திக் அறங்காவலர்கள் செய்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )