தமிழகத்தில் போதை பொருளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து திருச்செந்தூரில் அதிமுக சார்பில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது

தமிழகத்தில் போதை பொருளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து திருச்செந்தூரில் அதிமுக சார்பில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூர் ஒன்றிய, நகர அதிமுக சார்பில் பகத்சிங் பஸ் ஸ்டாண்ட் எதிரில் நடந்த போராட்டத்துக்கு, ஒன்றிய செயலாளர் பூந்தோட்டம் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட ஜெ., பேரவை தலைவர் கோட்டை மணிகண்டன், மாவட்ட ஜெ.பேரவை துணைச்செயலாளர் ஆர்.எம்.கே.எஸ் சுந்தர், மாவட்ட இணைச் செயலாளர்கள் பழக்கடை திருப்பதி, சுரேஷ்பாபு, மகாலிங்கம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மீனவரணி தலைவரும், திருச்செந்தூர் யூனியன் துணை சேர்மன், ரெஜிபர்ட் பர்னாந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், யூனியன் கவுன்சிலர்கள் நடுவை செல்வம், வாசுகி, நகர துணைச்செயலாளர் செல்வசண்முகசுந்தர், நகர பொருளாளர் வள்ளிராஜ், ஜெ. பேரவை நகர செயலாளர் ஆனந்த், முன்னாள் கவுன்சிலர்கள் வடிவேல், லெட்சுமணன், வக்கீல் ரவிச்சந்திரன், ராஜாநேரு, விஜயராகவன், பாஸ்கர், காளிமுத்து, தியாகராஜன், முனுசாமி, தேவராஜ், மணிமாறன், சிவசுப்பிரமணியன், செல்வகுமார், ராணி. பிச்சம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

செய்தி: திருச்செந்தூர் சதீஷ்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )