
தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
கோடை காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் மின்சாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கோடையில் அதிக மின் தேவை ஏற்பட்டால் அதை சமாளிக்க தமிழக மின்சார வாரியம் தயாராக உள்ளது. இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய சென்னையில் 60 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மின் தடை ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மின்னகத்தை அணுகி சீரான மின்சாரம் பெறலாம” எனக் கூறினார்.
தமிழ்நாட்டின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து 21 ஆயிரம் மெகாவாட் என்ற அளவைத் தொட்டுள்ளது. மத்திய மின் தொகுப்புகள், தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து மின்சாரம் வாங்கினாலும் தினமும் 300 முதல் 400 மெகாவாட் வரை மின்சாரம் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், அதை சமாளிக்கவே மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் மின்சாரவாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.