Breaking News
ஆன்-லைன் மூலம் கேஸ் சிலிண்டர் பதிவு செய்தால் 5 ரூபாய் சிறப்பு சலுகை

ஆன்-லைன் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து பணம் செலுத்தினால் 5 ரூபாய் சலுகை வழங்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ருபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கு பின்பு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. மின்னணு முறையில் பணப் பரிவர்த்தனை செய்யும் நுகர்வோருக்கும் வணிகர்களுக்கும் பரிசு வழங்கும் இரண்டு திட்டங்களையும் மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

இந்நிலையில், ஆன்-லைன் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து பணம் செலுத்தினால் 5 ரூபாய் சலுகை வழங்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இண்டர் நெட் பேங்கிங், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தலாம்.

டிஜிட்டல் பணவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சலுகை மின்னணு முறையில் சிலிண்டருக்கு பணம் செலுத்தும் போதும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.