Breaking News
முதல் முறையாக திகார் ஆண்கள் சிறையின் எஸ்.பி.யாக ஒரு பெண் நியமனம்

திகாரில் உள்ள ஆண்கள் சிறைக்கு முதன்முதலாக ஒரு பெண் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள திகார் ஆண்கள் சிறையின் டி.ஜி.யாக கிரண் பேடி மற்றும் விமலா மெஹ்ரா ஆகிய பெண்கள் பணியாற்றினார்கள். இந்நிலையில் முதல் முறையாக திகார் ஆண்கள் சிறையின் முதல் பெண் எஸ்.பி.யாக அஞ்சு மங்களா நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண்கள் சிறையின் எஸ்.பி.யாக இருந்த அஞ்சு ஆண்கள் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆணோ, பெண்ணோ கைதிகளுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள விரும்புவதாக அஞ்சு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

என்னை யாரும் ஜெயிலர் என்று அழைப்பதை விரும்பவில்லை. சிறை கண்காணிப்பாளர் என அழைக்க வேண்டும். சிறையில் உள்ள கைதிகள் அனைவரும் எனக்கு குழந்தைகள் போன்று. சிறையை குருகுலம் அல்லது ஹாஸ்டல் என்று அழைக்க விரும்புகிறேன்.

இங்கு கைதிகள் பாடம் கற்கிறார்கள் என்றார்.

1990ம் ஆண்டில் இருந்து பணியில் இருக்கம் அஞ்சு 3 ஆண்டுகள் திகார் சிறையில் பணியாற்றியுள்ளார். தற்போது அவர் 18 முதல் 21 வயதுள்ள 800 கைதிகளை கண்காணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.