Breaking News
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தருண் விஜய் எம்.பி. மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் !

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாஜக எம்பி தருண்விஜய் மெழுகுவர்த்தி ஏந்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

ஜல்லிக்கட்டுக்கு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்பை தடைசெய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக போராட்டம் நடைப்பெற்று வருகின்றது.

இளைஞர்கள், பெண்கள் தாமாக முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மெரினாவில் நேற்று முதலே பல்லாயிரணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் 2வது நாளாகவும் இடைவிடாது தொடர்ந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு நடத்தும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று போராட்டகாரர்கள் கூறிவருகின்றனர். இந்தநிலையில் பாஜக எம்பி தருண்விஜய் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்தினார். தருண் விஜய் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.