தூத்துக்குடியில் கடும் பனி மூட்டம்; மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பிய படகுகள்
![தூத்துக்குடியில் கடும் பனி மூட்டம்; மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பிய படகுகள்](https://worldpublicnews.com/wp-content/uploads/2017/02/Port.jpg)
வரலாறு காணாத பனி மூட்டத்தினால் தூத்துக்குடியில் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பினர். இன்று (21 ம்தேதி )காலை கடும் பனிப்பொழிவு இருந்தது. அதிகாலையில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் தொடர்ந்து கடலுக்கு செல்ல முடியாத அளவிற்கு மூட்டம் இருந்தது. இதனால் 275 க்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பின. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத பனி இருந்ததாக இப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.
நன்றி தினமலர்