Breaking News
ஐ.எஸ். பயங்கரவாதிகள் சதி: தாஜ்மஹாலுக்கு கூடுதல் பாதுகாப்பு

நினைவுச்சின்னமான தாஜ்மஹாலைத் தகர்க்க ஐ.எஸ். பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் .பயங்கரவாத அமைப்பு, இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கான புதிய திட்ட விவரத்தை வெளியிட்டுள்ளது. இந்த தகவலை சர்வதேச தீவிரவாத அமைப்புகளின் தகவல்களைத் தேடும் அமைப்பான சைட் புலனாய்வு குழு வெளியிட்டுள்ளது. ஆக்ராவில் உள்ள ஒரு நினைவிடத்தை தாக்கப்போவதாகக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அது ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை தகர்க்க திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதையடுத்து தாஜ்மஹாலுக்கு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

இந்தியர்களை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்க்கும் நோக்கில், இந்தியாவில் பிரத்யேக ஐ.எஸ். ஆள் சேர்ப்புப் பிரிவை உருவாக்க ஐ.எஸ் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கால்பதிக்க முயலும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு, . இந்த அமைப்பு தாஜ்மஹாலை தகர்க்க சதி திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து உளவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஐ.எஸ் பயங்கரவாதிகளை இந்தியாவில் கால்பதிக்க விடாமல் தடுக்கத் தேவையான தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை உளவுத்துறையுடன் இணைந்து புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர் என்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.