மெரினாவில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
![மெரினாவில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்](https://worldpublicnews.com/wp-content/uploads/2017/03/merina.jpg)
மெரினா கடற்கரையில் போராட்டம் நடக்க போவதாக வந்த தகவலை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா சதுக்கம் பேருந்து நிறுத்தம் முதல் கலங்கரை விளக்கம் வரையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதிவிரைவுப்படை மற்றும் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணியும் நடைபெறுகிறது.