Breaking News
மெரினாவில் இன்றும் தீவிர போலீஸ் பாதுகாப்பு

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியானதால் சென்னை மெரினா கடற்கரையில் இன்றும் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போலீஸ் குவிப்பு :

டில்லியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கும் ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் நேற்று (மார்ச் 29) மெரினா கடற்கரையில் கூடி போராட்டம் நடத்தினர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதிலும், அதனை மீறி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் கடலுக்குள் இறங்கியும் போராட்டம் நடத்தினர். இவர்களை போலீசார் கைது செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில், இன்றும் இளைஞர்களும், மாணவர்களும் மெரினாவில் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தொடர்ந்து 2 வது நாளாக இன்றும் மெரினாவில் தீவிர போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.