ஜார்க்கண்டில் காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்துக்கொலை: 3 பேர் கைது
![ஜார்க்கண்டில் காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்துக்கொலை: 3 பேர் கைது](https://worldpublicnews.com/wp-content/uploads/2017/04/Daily_News_8507610559464.jpg)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேறு இனத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் 19 வயது இளைஞர் ஒருவரை மக்கள் மரத்தில் கட்டிவைத்து அடித்தே கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட இளைஞன் முகமது ஷாலிக்கை மரத்தில் கட்டிவைத்து மக்கள் சரமாரியாக அடித்துள்ளனர். இரவு ஷாலிக் வீடு திரும்பததால் அவரது குடும்பத்தார் பல இடங்களில் தேடியும், கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர்.
கொலைக்கு எதிராக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.