Breaking News
ஆதார் விவரங்களில் திருத்தம் செய்ய இன்று முதல் சிறப்பு வசதி

ஆதார் விவரங்களில் திருத்தம் செய்யும் வசதி, தமிழக அரசின் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில், இன்று முதல் தொடங்கப்படுகிறது.

ஆதார் அட்டைகளில் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களை இன்று முதல் நிரந்தர ஆதார் மையங்களில் சென்று திருத்தம் செய்துகொள்ளலாம் என தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றில் செயல்பட்டு வரும் நிரந்தர ஆதார் மையங்களில் இன்று முதல் பொதுமக்கள் ஆதார் விபரங்களை திருத்தம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விபரங்களை திருத்தம் செய்துகொள்ள கட்டணமாக 25 ரூபாயும், ஆதார் அட்டையை அச்சிட்டு பெறுவதற்கு 10 ரூபாயும் கட்டணமாக பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் மையங்களின் சேவை தொடர்பாக 1800 4252 911 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.