Breaking News
ஆஸ்திரேலியாவில் விசா திட்டம் ரத்து : இந்தியர்களுக்கு பாதிப்பு

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் பயன்படுத்தி வந்த ‘457 விசா’ திட்டம் ரத்து செய்யப்படுவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதனால் இந்திய பணியாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியதாவது: ஆஸ்திரேலியா பிற
நாட்டினர் தங்கி பணிபுரிவதற்கான நாடுதான். இருப்பினும் ஆஸ்திரேலியாவில் உள்ள வேலைவாய்ப்புகளில் ஆஸ்திரேலியர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும். இதனால் ‘457 விசா’ திட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றார்.ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு காரணமாக, அங்கு ‘457 விசா’வை பயன்படுத்தி தற்காலிகமாக பணியாற்றி வந்த வெளிநாட்டு பணியாளர்கள் 95,000 பேர் பாதிக்கப்படவுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள், சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.