பள்ளி மீது மரம் விழுந்து 40 ஆசிரியர்கள் காயம்
![பள்ளி மீது மரம் விழுந்து 40 ஆசிரியர்கள் காயம்](https://worldpublicnews.com/wp-content/uploads/2017/04/school.jpg)
ஆந்திராவில் பள்ளி மேல்கூரை மீது மிகப் பெரிய அரச மரம் விழுந்ததில், 40 ஆசிரியர்கள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள ஜி.மாடுகுல எனும் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந் துள்ளது. இந்தப் பள்ளியில் நேற்று ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற் றிருந்தனர். இந்நிலையில் பள்ளி வளாகத்துக்குள் இருந்த மிகப் பெரிய அரச மரம் திடீரென வேரோடு முறிந்து விழுந்தது. இதில் கூரை இடிந்து பள்ளிக்குள் விழுந்ததில் ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்திருந்த 40 ஆசிரியர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.