Breaking News
பிலிப்பைன்ஸ் விபத்து: 24 பேர் பலி

பிலிப்பைன்சில், பயணிகள் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 24 பேர் பலியாயினர்; பலர் படுகாயம் அடைந்தனர். தெற்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டின் வட பகுதியில், மலைப்பாங்கான சாலையில், 45 பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ், திடீரென விபத்துக்குள்ளாகி, பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், பஸ்சில் பயணித்த, 24 பேர் பலியாயினர்; பலர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், இறந்தவர்களின் உடல்கள், காயமடைந்தவர்களை மீட்டனர்.பிலிப்பைன்சில், இந்த ஆண்டு நடந்த விபத்துகளில் இதுவே அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியது என்பதால், அந்நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.