Breaking News
விசாரணைக்கு முன்னதாக சுரங்க ஊழல் வழக்கில் காமத்துக்கு முன்ஜாமீன்

கோவாவில் நடந்த சட்டவிரோத சுரங்க ஊழல் வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு முன் விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்னதாக, கோவா முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் இடைக்கால முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

நேற்று சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளிடம் ஆஜராவதற்கு முன்பாக, திகம்பர் காமத் மாவட்ட நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இவருக்கு உடனடியாக இடைக்கால முன்ஜாமீனை நீதிமன்றம் வழங்கியது. மேலும் வரும் மே 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் பின்னர் அவர் சிறப்பு புலனாய்வு முன் விசாரணைக்கு ஆஜரானார். அங்கு சுரங்க ஊழல் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.