Breaking News
டில்லிக்கு அழைத்து செல்லப்படுகிறார் தினகரன்

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான தினகரனை டில்லி போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக, சென்னையை சேர்ந்த 3 பேருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில், சென்னையில் விசாரணை முடிந்ததை தொடர்ந்து இன்று இரவு 7.40 மணியளவில் தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரை டில்லிக்கு அழைத்து செல்ல போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் டில்லியில் கைதான ஹவாலா புரோக்கர் நத்துசிங்கிடம் விசாரணை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.