கைதிகளை விடுவித்து 82 மாணவியர் மீட்பு
![கைதிகளை விடுவித்து 82 மாணவியர் மீட்பு](https://worldpublicnews.com/wp-content/uploads/2017/05/prison.jpg)
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், கைதிகளை விடுவித்து, பயங்கரவாத அமைப்பான போகோ ஹராம் பிடியில் இருந்த, 82 மாணவியர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் செயல்பட்டு வரும், போகோ ஹராம் என்ற முஸ்லிம் பயங்கரவாத அமைப்பு, அரசுக்கு எதிராக போராடி வருகிறது.
கடந்த, 2014ல், சிபோக் பகுதியில் உள்ள பள்ளிக்குள் நுழைந்த போகோ ஹராம்
பயங்கரவாதிகள், அங்கிருந்த, மாணவியரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதில், 57 மாணவியர் தப்பி வந்தனர். ஆனால், 219 மாணவியர், தொடர்ந்து பயங்கரவாதி கள் பிடியில் இருந்தனர்.இவர்களை மீட்க, நைஜீரிய அரசு, மூன்று ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி, 21 மாணவியர், கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.
சமீபத்தில் நடந்த பேச்சின்படி, 82 மாணவியரை விடுவிக்க போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பு முன்வந்தது. இதற்காக, நைஜீரிய சிறையில் உள்ள, சில குறிப்பிட்ட கைதிகளை விடுவித்து, 82 மாணவியரை, அந்நாட்டு அரசு மீட்டுள்ளது.